November 4, 2023

சிந்தனைப் பொறிகள்

விதி அல்லது சட்டம் என்பது, ஒரு வழிமுறை அல்லது வாய்ப்பாடாகும்; ஆன்மா இவ்வழிமுறை களைப் பயன்படுத்துகிறது, அது இவ்வாய்ப்பாடுக ளுக்கு மேற்பட்டதாகும்.  
November 3, 2023

சிந்தனைப் பொறிகள்

சிறிதும் மாறாத இயற்கைவிதியும்கூட, இயற் தலைவனாகிய இறைவன் உருவமைத்துத் தொடர்ந்து பயன்படுத்தும் திட்டவட்டமான ஒரு வழி முறையேயன்றி வேறில்லை. அது ஆத்மனால் படைக்கப்பட்டதாகும், அதற்கு அப்பால் செல்வது ஆத் மனுக்கு இயலும். ஆனால் முதலில் நாம் […]
November 2, 2023

சிந்தனைப் பொறிகள்

செயலின்மையை விரும்புவது பேதமை, செய் லின்மையை வெறுப்பதும் பேதமையே; செய லின்மை என்பது இல்லாதவொன்றாகும். மணலில் அசைவற்றுக் கிடக்கின்ற, நாம் அசட்டையாக உதைத்தெறிகின்ற ஒரு சிறு கல்லும் இப்புவியின் மீது தன் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டே இருந்துள்ளது. […]
November 1, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

நீ மலையுச்சியில் தனித்து அசைவற்று மௌன மாக அமர்ந்திருக்கும் அதேசமயத்தில், நீ வழிநடத்தும் புரட்சிகளை உன்னால் காணமுடிந்தால், நீ தோற் றங்களிலிருந்து விடுபட்டவனாவாய். தெய்விகப் பார்வை பெற்றவனாவாய். – ஸ்ரீ அரவிந்தர்
October 5, 2023

சிந்தனைப் பொறிகள்

நீ மகத்தான செயல்களையாற்றிப் பெரும் விளைவுகளை உண்டாக்கிக்கொண்டிருக்கும்போ தும், நீ நீயாகவே எதையும் செய்யவில்லை என்பதை உன்னால் காணமுடிந்தால், இறைவன் உன் கண் களை மூடியிருந்த திரையை அகற்றிவிட்டான் என் பதை நீ புரிந்துகொள்ளலாம்.  
September 20, 2023

சிந்தனைப் பொறிகள்

தனிமையை விரும்புவது அறிவை நாடுவதன் அறிகுறியாகும்; ஆனால் பெருந்திரளிலும் போர்க் களத்திலும் கடைவீதியிலும் நாம் தொடர்ந்து தனிமையை உணரும்போதுதான் அறிவை அடைந்த வராவோம். – ஸ்ரீ அரவிந்தர்
September 19, 2023
ஸ்ரீ அரவிந்தர்

சிந்தனைப் பொறிகள்

பொருட்களின் தொடக்கமென்றும் முடிவென் றும் நாம் கூறுவது, நம் அனுபவத்தின் நடைமுறைப் பழக்கத்தைச் சார்ந்த சொற்களேயாகும். உண்மை யில் இச்சொற்களுக்கு மெய்யான இருப்பு ஏதும் கிடையாது, தொடக்கமென்பதும் முடிவென்பதும் ஏதுமில்லை. – ஸ்ரீ அரவிந்தர்
September 18, 2023

சிந்தனைப் பொறிகள்

உலகமென்பது நெடுங்காலமாய்த் திரும்பத் திரும்ப வரும் ஒரு பின்னமாகும். அதன் முழு எண் பிரம்மனாகும். காலம் தொடக்கமும் முடிவும் உடை யதாகத் தோன்றுகிறது. ஆனால் அதன் ஒவ்வொரு கூறும் நித்தியமானதாகும்; அதற்கு உண்மையில் தொடக்கமேதும் இருந்ததில்லை, […]
September 17, 2023

சிந்தனைப் பொறிகள்

மறைந்திருக்கும் கவர்ச்சியொன்று தன்னிடமி ருந்தே தப்பியோட ஆர்வங்கொண்டு, தான் இருப்ப தையே தீவிரமாக மறுக்கும்போது, அது வெறுப்பு என்னும் உணர்வாக வெளிப்படுகின்றது. இதுவும் இறைவன் தன் படைப்பினுள் ஆடும்திருவிளையாடலே. – ஸ்ரீ அரவிந்தர்