பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
உன் தவறுகளை உணர்ந்து கொள்ளுதல் நல்லது. ஆனால் உன்னையே வதைத்துக் கொள்ளக் கூடாது. நீ வருந்தக் கூடாது அதற்குப் பதில் நீ உன்னைத் திருத்திக் கொள்ளுதலே சிறந்தது. – ஸ்ரீ அன்னை
என் பாதுகாப்பு உனக்கு எப்பொழுதும் இருக்கிறது. எந்தக் கெட்டதும் நடக்காது. ஆனால் அச்சத்தை ஒழிக்கும் முடிவுக்கு நீ வர வேண்டும். அதன் பிறகு என் சக்தி முழுமையாக வேலை செய்யும். – ஸ்ரீ அன்னை
நீ உன்னிடம் உள்ள தவறுகளை, உன் இயல்பில் உள்ள குறைகளை உணர்ந்து கொண்டாய் என்பது மிக நல்லது. அப்படி உணர்ந்தவுடன் அக்குறைகளைக் கடந்து வந்து அத்தகைய இயல்பையே உன்னால் மாற்றிவிட முடியும். – ஸ்ரீ அன்னை
ஒரு தவறு உணரப்பட்டவுடன் அதையே முன்னேற்றத்திற்குரிய வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படுகிற மாற்றத்தை மனம் உணர்ந்துவிட்டால், அங்கு குற்றமும் அதற்கான காரணமும் மறைந்துவிடும். அதன்பிறகு அத்தவறு மீண்டும் நிகழாது. – ஸ்ரீ அன்னை