August 1, 2022
ஸ்ரீ அன்னை

உற்சாகமாய் இரு

உற்சாகமாய் இரு !!! உன் முன்னால் வழி திறந்திருக்கிறது. பயம் என்கிற மன நோயை உதறித் தள்ளு. இறை அமைதியைக் கொண்டு வா. பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
July 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பயம் தான் இறைவன்

பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை
July 30, 2022
ஸ்ரீ அன்னை

வெல்லப்பட வேண்டும்

எல்லா பயங்களும் வெல்லப்பட வேண்டும். அதற்குப் பதில் இறைவனின் அருளில் முழு நம்பிக்கையை வைக்க வேண்டும். – ஸ்ரீ அன்னை
July 29, 2022

பயப்படாதே

பயப்படாதே, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். இந்த எல்லாத் தொல்லைகளும் உன்னைவிட்டுப் போய்விடும். – ஸ்ரீ அன்னை
July 28, 2022
ஸ்ரீ அன்னை

வேண்டிக் கொள்வோம்

ஒவ்வொரு இரவும் உறங்கப் போரும் முன்பு அன்று செய்த தவறுகள் எதிர்காலத்தில் திரும்பி நிகழக் கூடாது என்று வேண்டிக் கொள்வோம். – ஸ்ரீ அன்னை
July 27, 2022
ஸ்ரீ அன்னை

மற்றம்

உன் தவறுகளை உணர்ந்து கொள்ளுதல் நல்லது. ஆனால் உன்னையே வதைத்துக் கொள்ளக் கூடாது. நீ வருந்தக் கூடாது அதற்குப் பதில் நீ உன்னைத் திருத்திக் கொள்ளுதலே சிறந்தது. – ஸ்ரீ அன்னை
July 26, 2022
ஸ்ரீ அன்னை

பாதுகாப்பு

என் பாதுகாப்பு உனக்கு எப்பொழுதும் இருக்கிறது. எந்தக் கெட்டதும் நடக்காது. ஆனால் அச்சத்தை ஒழிக்கும் முடிவுக்கு நீ வர வேண்டும். அதன் பிறகு என் சக்தி முழுமையாக வேலை செய்யும். – ஸ்ரீ அன்னை
July 25, 2022
ஸ்ரீ அன்னை

மாற்றிவிட முடியும்

நீ உன்னிடம் உள்ள தவறுகளை, உன் இயல்பில் உள்ள குறைகளை உணர்ந்து கொண்டாய் என்பது மிக நல்லது. அப்படி உணர்ந்தவுடன் அக்குறைகளைக் கடந்து வந்து அத்தகைய இயல்பையே உன்னால் மாற்றிவிட முடியும். – ஸ்ரீ அன்னை
July 24, 2022
ஸ்ரீ அன்னை

மற்றம்

ஒரு தவறு உணரப்பட்டவுடன் அதையே முன்னேற்றத்திற்குரிய வழியாக எடுத்துக் கொள்ள வேண்டும். தேவைப்படுகிற மாற்றத்தை மனம் உணர்ந்துவிட்டால், அங்கு குற்றமும் அதற்கான காரணமும் மறைந்துவிடும். அதன்பிறகு அத்தவறு மீண்டும் நிகழாது. – ஸ்ரீ அன்னை