வருத்தம் இவணெதும் திரும்பி வராதும், இன்னற்(கு) உரிய செய்தி என்கிற வாளால் பிளவினை உற்றிடா வண்ணமும் இருபெரு வெற்பின் இடையாழ்(வு) எனும்படி இருநிலை மனச்சான்(று) என்கிற ஆட்சிகளின் எல்லைகள் இடையுள ஆழம் மிக்கதோர் அமைதிப் பிளவில் […]
மண்ணில் வந்த நோக்கம் தனையவள் எண்ணம் என்றும் பதித்தாள் ஆதலின் ஒத்திணை(வு)அற்றே ஒதுங்கி வாழ்ந்தாள், உலகம் அளாவிய உணர்வில் கனிந்தவள் உளத்தால் உலகோர்க்(கு) உறவாய்ப் பொலிந்தாள், எவரும் பாகம் ஏற்கா(து) இருக்கவே தன்னந் தனியே தான்முன் […]
இந்தப் பொழுதிலும் இன்னல் உற்றுப் போரா டியதே அவளது புற்கலன்; ஏற்ற அவளின் மானிட இயல்பும் பாதி இறைமைப் பாங்காய் இருந்தது: அனைவரில் இருக்கும் புனித ஆன்மா அவளின் அகத்துரு வாகத் தெரிந்தது, இயற்கை ஆற்றல் […]
எனிது எனிலோ, இயற்கை அன்னை தன்னின் வல்லமைத் தடத்தில் நடக்கையில் உயிர்ப்பொருள் ஒன்றின் உரத்தை முறிக்கிறாள், ஆன்மா ஒன்றின் ஆக்கம் தகர்க்கிறாள், ஆயினும் அதற்கெலாம் கவலை கொளாதே அழிந்து பட்டவை அவணே தங்கியும் பாதிப்(பு) இன்றிப் […]