சாவித்ரி

November 3, 2022
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

அருகே அணுகத் துணிதற்(கு) அரிதாய் எதையும் விரும்பா இரக்கம் அற்றதோர் அடரிருள் அரக்கனின் கருமையி னூடே, நம்பிக்கை ஒன்று நன்கு துணிந்து பதுங்கிப் பதுங்கிக் கள்ளமாய் ஊர்ந்தது. – ஸ்ரீ அரவிந்தர்
November 2, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

இறைவனின் தீண்டுதல் இருந்திடும் போழ்தினில் நினைத்த யாவையும் நிறைவேற் றலாமே. – ஸ்ரீ அரவிந்தர்
November 1, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

ஓசை எழுப்பினும் உணரப் பெறாத வெறுமை விதையாம் சிந்தனை ஒன்றை விளையும் பயிரென விதைத்திட்ட வேளை, இருள்சூழ் ஆழத்(து) இடுக்கண் நடுவே உணர்வுக் கூறொன்(று) உதித்திட்ட வேளை நெடுநாள் முன்னுயிர் நீத்துச் சென்ற ஆன்மா ஒன்றினுக்(கு) உயிர்த்துடிப்(பு) […]
October 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

சாவித்ரி

மறுப்பினைக் காட்டியும் மௌனம் காத்தும், வினையால் வந்திடும் விளைவைப் பற்றிய விழிப்புணர்(வு) இலாது மெத்தனம் கொண்ட அண்டமா அவளியை இடைமறித்(து) அவ்விழை: தகவல் ஏந்தித் தவழ்ந்த வண்ணம், விழிப்புடை உணர்வையும் விஞ்சிடும் மகிழ்வையும் செயல் வேட்டத்தில் […]
October 30, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

வரம்பிலாத் தன்மையின் மறுபுறத் திருந்தே ஊமை ஆழ்தடத்(து) ஊடகம் துளைத்தொரு தெய்வக் கண்ணோக்கு தேடி வந்தது, அண்டத்(து) அளப்பரும் ஓய்வின் இடையே, இயப்பரும் களைப்பினில் இளைத்துப் போன அகிலம் தன்னின் அதிமந்த நிலையிலே, மறந்து போன […]
October 29, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

ஏதோவோர் இடத்தில் புலப்படா வகையொரு சிறுதுளை இடைவழி தெரிய லாயிற்று: பாலைவனமாய்ப் பாதிப்(பு) உற்ற நெஞ்சம் ஒன்றை நேரிலா தொருநகை நயமாய் நெருங்கி மயக்கினாற் போன்று, நீள்வழி காட்டும் நிறத்தொரு தனியிழை தயங்கிய வண்ணம் உயிர்ப்பொருள் […]
October 28, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

கவனமே காட்டாப் பேரண்டத் தாயினொரு கன்னம் தொட்டதொரு சின்னச் சிசுவிரல் இனிசெய எதிருள முடிவிலாப் பணிகளை எண்ணிப் பார்க்க இயைத்தது போன்றே, மிகச்சிறு பிள்ளையின் வேணவா ஒன்று இருளடர் பெருவெளியை இறுகப் பிடித்தது. – ஸ்ரீ […]
October 27, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

உருவுறா உணர்வுத் தொகுதி ஒன்று வெளிச்சம் காண விரும்பிய பொழுது வெறுமை கொண்டமுன் வித்தகம் ஒன்று வெகுதூர மாற்றம் வேண்டியேங் கியது. – ஸ்ரீ அரவிந்தர்
October 26, 2022
ஸ்ரீ அன்னை

சாவித்ரி

எங்கே உளதென இயம்பொணா ஆழத்து வெறுமைப் பள்ளத்தே வீற்றது போலவும், கடைமுடி(வு) என்கிற இந்தக் கரைதலின் உள்மையம் தனிலே உறைந்தது போலவும், அழிந்து பட்டுப் புதைந்து போகிய கடந்த கால வாழ்வினை மீட்க முனைந்த ஒருவனின் […]