ஸ்ரீ அன்னை

August 8, 2022

மறைந்துபோகும்

இறைவனை நோக்கித் திரும்பு. உன் எல்லாத் துன்பங்களும் மறைந்துபோகும். – ஸ்ரீ அன்னை
August 7, 2022
ஸ்ரீ அன்னை

தொல்லை

ஒருதொல்லையைப் பற்றி நீ நினைத்துக் கொண்டே இருந்தால் அது தொல்லையை அதிகப்படுத்திக் கொண்டே போகும். அதன் மேல் நீ ஒருமுகப்பட்டால் அது பூதாகரம் ஆகும். – ஸ்ரீ அன்னை
August 6, 2022
ஸ்ரீ அன்னை

பயம்

பயம் என்பது மறைமுகமான சம்மதம் ஆகும். நீ ஏதாவது ஒன்றைப் பற்றி பயப்படுகிறாய் என்றால், அதற்கு நீயே மறைமுகமாய் சம்மதிக்கிறாய் என்று பொருள். அதன் மூலம் அதன் கரத்திற்கு வலுவூட்டுகிறாய். இதனை ஆழ்மனச் சம்மதம் என்று […]
August 5, 2022
ஸ்ரீ அரவிந்தர்

முயற்சி செய்யக்கூடாது

உலகமே துயரங்களாலும் துன்பங்களாலும் நிரம்பியது. வேறு எந்த ஒரு கூடுதலானதுயரத்திற்கும் காரணமானவராக இருக்க எப்போதுமே ஒருவர் முயற்சி செய்யக்கூடாது. – ஸ்ரீ அன்னை
August 4, 2022
ஸ்ரீ அன்னை

தெய்வீக அன்பு

மனிதத் துயரத்திற்கு எல்லாம் ஒரே தீர்வு தெய்வீக அன்புதான். – ஸ்ரீ அன்னை
August 3, 2022
ஸ்ரீஅன்னை

எல்லாமே சரியாகிவிடும்

நீ பயப்படாமல் இருந்தால், எதுவுமே உனக்குத் தீங்கு செய்ய முடியாது. ஆகவே அஞ்சாதே. அமைதியாய் இரு. மௌனமாய் இரு. எல்லாமே சரியாகிவிடும். – ஸ்ரீ அன்னை
August 2, 2022

ஆதரிக்காதே

துயரத்தை ஆதரிக்காதே. துயரம் எல்லாம் உன்னைவிட்டு ஒரேயடியாகப் போய்விடும். தவிர்க்க முடியாத ஒன்றல்ல துயரம். துயரமற்ற நிலைத்த உற்சாகமான அமைதியான மனநிலை யில்தான் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகிறது. செயா. – ஸ்ரீ அன்னை
August 1, 2022
ஸ்ரீ அன்னை

உற்சாகமாய் இரு

உற்சாகமாய் இரு !!! உன் முன்னால் வழி திறந்திருக்கிறது. பயம் என்கிற மன நோயை உதறித் தள்ளு. இறை அமைதியைக் கொண்டு வா. பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
July 31, 2022
ஸ்ரீ அரவிந்தர்

பயம் தான் இறைவன்

பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. எல்லாமே இறைவன்தான். இறைவனைத் தவிர வேறொன்றும் இல்லை. இறைவன் ஒருவன்தான் இருக்கிறாள். நம்மை பயமுறுத்துவதற்காகத் தோன்றுவது எல்லாம் இறைவனின் சிறிய பொருளற்ற மாறுவேடங்கள் தான். – ஸ்ரீ அன்னை