இந்த உலகம் சச்சரவுகளாலும், துயரங்களாலும், சிரமங்களாலும் உருவாக்கப்பட்டது. இது இன்னும் மாறவில்லை. மாறுவதற்கு நெடுநாள் பிடிக்கும். இதிலிருந்து வெளியேற ஒவ்வொருவருக்கும் சாத்தியமுண்டு. இவற்றிலிருந்து மீள இறையருள் ஒன்றுதான் சிறந்த வழி. – ஸ்ரீ அன்னை
யோகம் என்பது இறைவனுடன் ஒன்றிப்பதாகும். ஒருவன் தன்னை இறைவனுக்கு அர்ப்பணிப்பதால் இந்த ஒன்றிப்பு வருகிறது. சுய அர்ப்பணமே ஒன்றிப்பின் அடிப்படையாகும். – ஸ்ரீ அன்னை