எல்லோருக்குமே துன்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எதிர்கொள்ளும் முறையே வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. சிலர் புன்னகை செய்கிறார்கள். சிலர் பெரிதாக்கி விடுகிறார்கள். – ஸ்ரீ அன்னை
நேர்மையாய் இருப்பவர்க்கு என்னால் உதவி செய்ய முடியும்; இறைவனை நோக்கித் திருப்ப முடியும். ஆனால் எங்கு நேர்மையின்மை இருக்கிறதோ அங்கு என்னால் குறைந்த அளவே செயல்பட முடியும். – ஸ்ரீ அன்னை
இறை அருளும் பாதுகாப்பும் எப்போதும் உனக்கு உண்டு. உள்முக அல்லது வெளிப்புற இடையூறோ அல்லது தொந்தரவோ வரும்போது அது உன்ளை உன்னைப் பாதுகாக்கும் இறைசக்தியிடம் புகலிடம் தேடு. இதை நீ எப்போதும் நம்பிக்கையுடனும் நேர்மையுடனும் செய்வாய் […]
உன் இடையூறுகளை மற. இறைவனின் பணியைச் செய்ய அவனுடைய முழுமையான கருவியாக இருப்பதையே மேலும் மேலும் நினை. இறைவன் உன் எல்லாத் துன்பங்களையும் வென்று உன்னை தெய்வீக மாற்றம் அடையச் செய்வான். – ஸ்ரீ அன்னை
ஓர் இலட்சியத்திற்காக வாழும் வாழ்வில் கிடைக்கும் மகிழ்ச்சியே நம் பாதையில் எதிர்ப்படும் சிரமங்களுக்குக் கிடைக்கும் இழப்பிடு ஆகும். உள் விதியின் மேல் நம்பிக்கை வை. உன் பாதை வெளிச்சமாகும். – ஸ்ரீ அன்னை