ஆரோ உலகம்
  • About Us
  • ஸ்ரீ அன்னை
  • ஸ்ரீ அரவிந்தர்
  • ஶ்ரீ அன்னை: மலர்களின் மொழியில்
    • ஆர்வம் : Aspiration
    • மனதின் மலர்கள் : Flowers of the Mind

யோகசாதனை

  • Home
  • ஸ்ரீ அன்னை
  • யோகசாதனை
அன்னையின் மந்திரங்கள்
July 27, 2024
அன்னையின் மந்திரங்கள்
December 6, 2024
Published by auro on December 5, 2024
Categories
  • ஸ்ரீ அன்னை
Tags
  • அன்னையின் மந்திரங்கள்

கேள்வி: யோகம் மனிதகுலத்திற்காகவா பயிலப் படுகிறது?

அன்னை: இல்லை. அது இறைவனுக்காகவே பயி லப்படுகிறது. மனிதருடைய நலனுக்காக அல்ல, இறை வனை வெளிப்படுத்துவதற்காகவே நாம் யோகம் செய்கிறோம். இறைவனின் சித்தத்தை நிலைநாட் டவே நாம் இங்கு இருக்கிறோம். இறைவன் புவியில் படிப்படியாக வெளிப்படவும், இறைவனின் ஆட்சி புவியில் நிலைபெறவும், அவனது சித்தத்திற்கு உரிய கருவியாக அமைவதற்காகவே நாம் இங்குள்ளோம். இறைவனது அழைப்புக்குப் பதிலளிக்கும் மனிதர் மட்டுமே அவனது அருளைப் பெறுவர்.
மனிதகுலம் முழுவதுமே, நேரடியாக இல்லாவிடி னும் மறைமுகமாகவாவது பயனடைவது, மனிதகு லத்தின் நிலையையே பொறுத்ததாகும். இப்போது உள்ள நிலைமையை ஆராய்வோமானால் அதிக நம்பிக்கைக்கு இடமில்லை. இன்று மனிதகுலத்தின்பிரதிநிதியாகிய சாதாரண மனிதனின் மனநிலை என்ன? உண்மையிலேயே தெய்விகமான எதையாவது நேரடியாகச் சந்திக்கும்போது, அவன் சினங்கொண்டு அதற்கு எதிராக எழுவதில்லையா? இறைவன் என்றால், தான் பேணிக் காத்துவரும் உடைமைகளை அழிப்ப வன்தான் என்று மனிதன் உணர்வதில்லையா? இறைவனது சித்தத்தையும், இறைவன் திருவுளங் கொள்ளும் எல்லாவற்றையும் அவன் முற்றிலும் எதிர்த்துத் தொடர்ந்து கூச்சலிட்டுக்கொண்டு இருக்க வில்லையா? இறைவனின் வருகையால் மனிதகுலம் சிறிதேனும் பயனடைய வேண்டுமென்றால் அது மிகவும் மாற வேண்டியுள்ளது

Share
0
auro
auro

Related posts

December 13, 2024

இறைவனை மறப்பதேன்?


Read more
December 11, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more
December 9, 2024

அன்னையின் மந்திரங்கள்


Read more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

An offering at the lotus feet of Sri Aurobindo and The Mother by In Search of The Mother